Thursday, 15 March 2012

பாட்டியும் பேரனும்



அன்று சனிக்கிழமை ,, எனது  ஆபிஸ் அரைநேரம் மட்டுமே ,, அதாவது 10௦ மணிக்கு சென்று 12   மணிக்கு கிளம்புவது ..
நான் ஊருக்கு செல்வதால் அன்று ஒரு மணிநேரம் பர்மிசன் ..

எக்மோர் தூரம் என்பதால் நான் வழக்கமாக தாம்பரம் சென்று ட்ரெயின் ஏறுவேன் ...
வைகை 12 .30  க்கு எக்மோரில் கிளம்பி 1 மணிக்குதான் தாம்பரம் வரும் ... நான் சரியாக 12 .45 க்கு சென்றுவிட்டேன் .வேகமாக வந்ததை சரிகட்ட ஒரு காபி குடிக்கலாமென வாங்கிகொண்டு ஒரு இடத்தில அமர்ந்தேன் ..

அருகில் ஒரு குரல் கேட்டது ..

பாட்டி டீ குடிக்கறயா ?

நீ குடி ராசா .. பாட்டி சொன்னாள்.

அவன் எந்திரிச்சு போய் ஒரு காப்பி வாங்கி கொண்டுவந்து பாட்டியிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்தான் ..

நீ குடிடா .. 

எனக்கு வேணாம் , நீ குடி ..

நான் எனக்கு வேணும்னு கேட்டேனா ?. நீதான வாங்கிட்டு வந்த .. நீயே குடி...

வேணாம் .. உன்கிட்ட சொல்லிட்டுதான வாங்கிட்டு வந்தேன் .. ஒழுங்கா குடி..

நான் பாட்டியினை பார்த்தேன் ..
ஏன் எல்லா பாட்டியின் முகங்களும் ஏதோ ஒன்றை இழந்தது போலவே இருக்கிறார்கள் ..
ஆனால் தாத்தாக்கள் அப்படி இருப்பதில்லையே ...எனக்கு என் பாட்டியின் நினைவு வந்தது ..
85 வயதுக்கு மேலே ஆகிறது ..இன்னமும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன்  ஆண்டவனை கும்பிட்டுகொண்டு இருக்கிறார்கள் ...எனக்கு தெரிந்து மிக சிறிய எழுத்துக்கள் இருக்கும் புத்தகம் பைபிள் .. ஆனால் என் பாட்டி கண்ணாடி இல்லாமல் இன்னமும் பைபிள் படித்து கொண்டிருக்கிறார்கள் ...என் பாட்டியை பற்றி யோசிக்கும் போதெல்லாம் என்னுடைய நினைவுகளில் வருவது என் சிறு வயது நினைவுகள்தான் ..என் பாட்டி ஒரு என்டர்பிரிநுர் ... அதாவது சுய வேலைவாய்ப்பு .. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் பாட்டி கிறிஸ்த்துவ  பள்ளிகூட வாசல் முன்பு முட்டாய் ஏவாரம் செய்பவர்கள் .. தினமும் காலையில் நாலு மணிக்கு முன்னாடியே எந்திரிச்சுடும்..  மண்டவெல்லத்தை பாகு காய்ச்சி அதில் ஜவ்வு முட்டாய் செய்ய ஆரம்பிக்கும் ..அந்த ஜவ்வு முட்டாயிற்கு அப்போதெல்லாம் நான் அடிமை ... அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும் .. பின் நானோ என் அண்ணனோ அதையும் மத்த எல்லாத்தையும் எடுத்துகிட்டு பள்ளிகூடத்துக்கு ஓடுவோம் ... அப்புறம் பாட்டி வர்றவரைக்கும் நாங்க ஏவாரம் பாத்துட்டு பாட்டி வந்தவொடனே நாங்க போய் கிளம்பி வருவோம் .. வாரவாரம் சந்தைக்கு போறது .. காதர் கடையில் பால்கோவவும் கல்லமிட்டையும் பொறி உருண்டையும் மொத்தமா வாங்கறது ...  

ஆனா எங்க பாட்டியோட மறுபக்கம் ரொம்ப உக்கிரமா இருக்கும் ... நாராயணமூர்த்தி அன்னிக்கு நாமம் போட்டுக்கிட்டு நாலு வீட்டுல பிச்சை எடுக்கனும்னு பக்கத்து வீட்டுக்கு மட்டும் போக சொன்னப்ப... நானும் எங்க அண்ணனும் காசு அதிகமா கிடைக்கும்னு கடைவீதிக்கு போனப்ப வெளக்குமாறு எடுத்துக்கிட்டு ஊரு பூராம்  சுத்தி சுத்தி அடிச்சதை இன்னும் மறக்க முடியல..  

நினைவுகளில் இருந்து மீண்டு வந்தேன் .. இன்னமும் அந்த பாட்டியும் பேரனும் சண்டை போட்டுகொண்டிருந்தார்கள் ..

இப்ப நீ ஒழுங்கா வாய மூடிகிட்டு காப்பிய குடிச்சுட்டு வா ..ட்ரெயின் வந்துரும் ..
நம்ம பொட்டி கடைசீல இருக்கு ..

நீ குடிகலேன்னா எனக்கும் வேணாம் போடா..

இதுக்குதான் உன்கூட வரமாட்டேன்னு சொன்னேன் கேட்டியா.... எங்க போனாலும் ஏதாவது தொனதொனண்டு ...

நானா உன்னைய வரசொன்னேன் .. போய் உன் அம்மாகிட்ட கேளு ..
உன்னைய அனுப்பறத்துக்கு பதிலா ஒரு ஒலக்கைய கூட அனுப்புன்னு அவகிட்டதான் சொன்னனே..

இங்க பாரு ..கடைசியா கேக்குறேன் ..இப்ப நீ குடிக்க முடியுமா இல்ல குடிக்க முடியாதா..

நீ குடிச்சுட்டு கொடு நான் குடிக்கறேன் ..

எனக்கு வேணாம் 

எனக்கும் வேணாம் ..

சரி ஓகே .. நான் டீய கீழ ஊத்திட்டு தம்ளர கொடுத்திட்டு வந்துறேன் ..
இங்கேயே உக்காந்துக்கிட்டுறு ..

டேய் .. டேய்.. காச போட்டு வாங்கி கீழ ஊத்தரானாமே .. கொண்டாடா இங்க .. காசோட அரும உனக்கு எங்க தெரியபோகுது ..எல்லாம் என் வயித்துல பிறந்தத சொல்லணும் ... அது சரியா இருந்தாதான உன்னைய சொல்லமுடியும் ...

வெற்றி புன்னைகையுடன் பேரன் டீயை பாட்டி கையிலே கொடுத்தான் ..
பாட்டி டீயை குடித்துகொண்டிருக்கும் போது சிறுவன் சொன்னான் ..

இனிமே என்னைய எங்கையாவது போறப்ப கூப்ட்டு பாரு.. அப்ப பேசிக்கறேன் ..

சீ நாயே .. நான் எதுக்கு உன்னைய போயி கூப்புடுறேன் .. நீ ஒரு உதவாகர  ..

ஆமா நான் உதவகரதான் .. இனிமே ஜென்மத்துக்கும் உன்கூட வரமாட்டேன் ..

ட்ரெயின் வந்தது ..

நான் அவர்களுடைய பெட்டியை விட்டு ரொம்ப தூரம் .. அதனால வேகமா போய்ட்டேன் ..

மதுரைக்கு நைட்டு 8  மணிக்கு போய் சேர்ந்தோம் ...

ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து வெளிய வந்து பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு போனேன் ..
பஸ்சிற்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.. எனக்கு பின்னே 

நீ சாப்பிடு ..

எனக்கு வேணாம் .. நீ சாப்பிடு ..

என் ராசல்ல .. ஆளுக்கு கொஞ்சம் சாப்புடுவோம் .. என்னால முழுசா சாப்புட முடியாதுப்பா...

பின்ன எதுக்கு கேட்ட ..

டேய் .. ஆசையா இருக்குதுன்னுதான் கேட்டேன் ... ஆனா முடியலையே ..

சேய்.. இதுக்குதான் நான் உன்கூட வர்றது இல்ல .. உன்னைய பேசாம தனியா ஏத்தி விட்டிருக்கணும் ..

ஆமா .. இந்த 80 வருசமா இவன்தான் கூட வந்தான் .. போடா பொசகெட்டபயலே . நான் இன்னும் எட்டு ஊருக்கு வேல பாப்பண்டா ..

என்னுடைய பஸ் வந்தது .. கிளம்பினேன் 

ஆனால் ஒன்று .. கண்டிப்பாக இவர்களை மறுபடியும் ரயில்வே ஸ்டேஷனிலோ அல்லது பஸ் ஸ்டான்டிலோ பார்ப்பேன் என நினைத்துக்கொண்டே என் பாட்டியுடன் சண்டைபோட பஸ் ஏறினேன் ...


Tuesday, 30 August 2011

விண்டோஸ் - 8 (WINDOWS 8)

எனக்கு தெரிந்து எல்லா சொந்த கம்ப்யூட்டர் வெச்சு இருக்குற எல்லோரும் விண்டோஸ்தான் யூஸ் பண்றாங்க ...
இந்த செய்தி அவங்களுக்கனது .. உங்களில் கொஞ்ச பேராவது விண்டோஸ் - 7  யூஸ் பண்ணுவீங்கனு நினைக்கறேன் .. ஏன்னா இதுவரைக்கும் 400 மில்லியன் அதாவது 40  கோடி லைசென்ஸ் மைக்ரோசாப்ட் வித்திருக்கு ... இது போக கொஞ்சம் அதிகமாக கிராக்(crack ) டவுன்லோட் ஆகீயிருக்கும்னு நினைக்கறேன்  ....

இப்போ புதுசா மைக்ரோசாப்ட் நிறுவனம் வின்-8  அதாவது விண்டோஸ்-8 (WINDOWS - 8 ) ரிலீஸ் பண்றாங்க .. அது எந்த மாதிரி இருக்கும்னு பார்க்கணும்னா   http://www.youtube.com/watch?v=p92QfWOw88I  ....

இந்த  விண்டோஸ் -8 ஐ விண்டோஸ் - 7  யூஸ் பண்ற எல்லோருமே எந்த ஒரு ஹர்ட்வர் அப்டேட்டும் பண்ணாமலே  இன்ஸ்டால் பண்ணலாம் ..
அப்புறம் இந்த ரீலீசெக்குனே ஸ்பெஷல்லா கொஞ்சம் சேர்த்து இருக்காங்க .. இத பத்தி உங்கள்ளுக்கு எதாவது தெரிஞ்சுகனும்னா இந்த ப்ளாக்க ரெகுலரா பாருங்க ..


உங்கள்
G


Monday, 29 August 2011

சிறுகதை - ஐந்து ரூபாய்

தினமும் காலையில் கடற்கரையில் நடந்தால் தொப்பை குறைந்துவிடும் என்று நம்பி கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன் .

தொப்பை குறைந்ததோ இல்லையோ ஒரு சிறந்த நட்பு வட்டம் உருவானது ...செல்லமாக எல்லோரும் சித்தப்பா என அழைக்கும் மோகன் சார்( மெட்ராஸ் யுனிவெர்சிட்டியில் கிளெர்க்), பெரியப்பா என அழைக்கும் பிரகாஷ் சார் (முன்னால் போலீஸ் அதிகாரி , தற்போது சிரிப்பு போலீஸ் )
பந்தா பார்ட்டி என அழைக்கும் கருப்புசாமி ( பக்கத்தில் வீடு இருந்தாலும் காரிலே வரும் காரணத்தாலும் , எந்நேரமும் கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு  இருப்பதாலும் ) , நவீன் என்கிற ஷேர் மார்க்கெட் புரோக்கர் ( கொஞ்சம் டீசண்டாக கன்சல்டன்ட் என சொல்லலாம் ), மற்றும் ஐந்து , ஆறு பேர் கொண்ட குருப்பாக சேர்ந்து விட்டோம் .எல்லோரும் காலை சரியாக 5 .30  மணிக்கு வரவேண்டும் என்பது எங்களுக்குள் பேச்சு ...


போனவாரம் திங்கட்க்கிழமை நான் கொஞ்சம் முன்னதாகவே போய்விட்டேன் ..

பின்னாளில் யோசித்து பார்த்த போது  அன்றைய தினம் அப்படி நடந்திருக்க கூடாது என தோன்றியது ...

அந்த ஒரு நாளின் பாதிப்பு அந்த வாரம் முழுவதும் யாருடைய கண்ணையும்  பார்த்து பேசவில்லை ...என்ன பேசினாலும் சிரித்தாலும் தலைகுனிந்து மட்டுமே செய்தேன் ...

அப்படி என்னதான் நடந்தது அன்று ..
ஒரு சின்ன பிளாஸ்பேக்  :
(தேவைபடுபவர்கள் ஒரு கொசுவர்த்தி எடுத்து முன்னால் வைத்து சுற்றுங்கள் அல்லது தலையை ஒரு பக்கமாக தூக்கி கொண்டு வானத்தை பாருங்கள் )

திங்கட்கிழமை : முதல் நாள் இரவு  படித்த ஒரு மொக்கை பிளாக் (Blog )  ( பெயர் குறிப்பிட ஆசையுண்டு - விருப்பமில்லை)   காலை 4  மணிக்கு கனவில் வந்து கலவரபடுத்தி எழுப்பி விட்டது .. மறுபடியும் தூங்க முயற்சித்து கனவு கண்டினியு ஆகிவிட்டால் என்ன  செய்வது என்று பயந்து அப்போதே கிளம்பி பீச்சிற்கு சென்று விட்டேன் .. அந்த நேரத்தில் யாரும் இல்லாத காரணத்தால் கொஞ்சம் யோகா செய்து பார்க்கலாம் என்று தோன்றியது ..

மெதுவாக சென்று கடற்கரை மணலில் அமர்ந்தேன் ..
முதலில் மூச்சு பயிற்சி செய்யலாம் என சம்மணமிட்டு கைகளை எப்படி வைக்க வேண்டும் என தெரியாமல் நெஞ்சின் குறுக்கே கட்டி கொண்டேன் . அது சரியான பொசிசனாக இல்லாததால் கைகளை கீழே வைத்தேன் அப்பொழுது எதுவோ வட்ட வடிமாக  என் கைகளில் பட்டது ,,  சிப்பியாக இருக்கும் என நினைத்து எடுத்து பார்த்தேன்   ஆனால் அது அழகிய புதிய மாடல் ஐந்து ரூபாய் நாணயம் அன்றைய எனது பொருளாதார நிலைமைக்கு இந்த ஐந்து ரூபாய்  ஒரு பெரிய சந்தோசமே.

காலையில் அதிர்ஷ்டம் என நினைத்து எடுத்து பத்திரமாக பாக்கெட்டில் போட்டு கொண்டேன் , மறுபடியும் மூச்சு பயிற்சி செய்யலாம் என கண்களை மூடி கால்களை சரியாய் வைத்துகொண்டு கைகளை எங்கே வைப்பது என தெரியாமல் ஆனால் தெரிந்தே மணலில் வைத்தேன் ஒருவேளை இன்னொரு ஐந்து ரூபாய் கிடைக்குமா என்று !!!!!!


யாரோ என் பெயர் சொல்லி கூப்பிடுவது போல இருந்தது , திரும்பி பார்த்தேன் , புரோக்கரும் ஸாரி கன்சல்டன்ட்டும் , மற்றொரு நண்பரும் தூரத்தில் நின்று கொண்டிருந்தனர் ,,  எழுந்து செல்லும்பொழுது கொஞ்சம் திரும்பி நான் அமர்ந்திருந்த இடத்தின்  அட்சயரேகையும் , தீர்க்கரேகையும் மனதிலே குறித்துக்கொண்டு அவர்களை நெருங்கி காலை வணக்கத்தை சென்னை முறையில் சொன்னேன் .

என்னால் அன்றைய தினம் அவர்களுடன் இயல்பாய் இருக்க முடியவில்லை,கடற்கரை மணல் வெளி முழுவதும் பணம் புதைந்து இருபது போல் ஒரு உணர்வு.  மற்றவர்களுடன் என்னால்  இயல்பாய்   ஒன்ற முடியவில்லை.நடந்து கொண்டு இருக்கும்போதே மோகன் திடீர் என்று கீழே குனிந்து ஏதோ ஒன்றை எடுத்தார் ,எல்லாரும் ஆச்சர்யமாய் பார்த்தால் அது ஒரு பழைய பத்து ருபாய் நோட்டு, எனக்கு திடீரென்று  மோகன் மேல் ஒரு பொறாமை  உணர்ச்சி தோன்றியது.

மனம்  ஒரு நிலையில் இல்லை.பார்க்கிற எல்லா பொருள்களுமே நாணயங்களாகவும், பணமாகவும் தோன்றின, என்னால் நண்பர்களுடன்  அன்று சேர முடியவில்லை.

என்னுடைய இந்த நிலைமை உங்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம்,ஆனால் இது உங்கள் எல்லாருக்குமே வரக்கூடிய ஒன்று தான்.

அப்பொழுது தூரத்தில் ஒருத்தரை பார்த்தேன் ...........

இப்பொழுது நான் ஒரு முக்கியமான நபரை அறிமுகபடுத்தபோகிறேன்  ,,

அவர் பெயர் - தெரியாது
அவர் ஏரியா - தெரியாது
அவர் தொழில் - தெரியாது

அவரை பற்றி கொஞ்சம் கூட தெரியாது ஆனால் அவர் தினமும் எங்கள் எல்லோருக்கும் ஒரு காலை வணக்கத்தை ஆங்கிலத்தில் கண்டிப்பாய் தந்து விடுவர் ,, வந்த புதிதில் எனக்கு அவரை பற்றி ஆச்சர்யமாகவே இருந்தது ஆனால் காலப்போக்கில் பழகி விட்டது . அவர் தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோருக்குமே குட் மார்னிங் சொல்லிகொண்டே செல்கிறவர் , அவர்முன் ஒரு குழந்தை தனியாக சென்றால் உடனே அதன் அப்பா அம்மாவை கடிந்து கொள்வர் ,, யாரேனும் எதாவது சாப்பிட்டுவிட்டு பேப்பரை கீழே போட்டால் உடனே திட்டி அதை அவரை எடுக்க விடாமல் இவரே எடுத்து சென்று குப்பை தொட்டியில் போடுவார் , , அவர்களே எடுத்தால் அடுத்த முறை மறந்து விடுவார்களாம் ஆனால் இவர் எடுத்து போட்டால் அவர்கள் மறக்க மாட்டார்கள் என நினைத்தார் .

 
அந்த பெயர் தெரியாத நண்பர்தான் ( இன்று கண்டிப்பாய் அவர் பெயர் கேட்க வேண்டும் )  இப்போது தூரத்தில் வந்துகொண்டிருப்பது .. நான் நண்பர்களுடன் பேசிகொண்டே நடந்து கொண்டிருந்தேன் .. 


அப்போது என் நண்பர் கூட வந்திருந்த மற்றொரு நண்பர் ஒரு பேமஸ் எழுத்தாளரை தேவை இல்லாமல் குறைகூறி கொண்டு வந்தார் எனவே நான் பேச்சை கவனிக்காமல் கடல் இருந்த திசையில் பார்த்துகொண்டே நடந்தேன் ,, பின்னர் என்னையும் அறியாமல் என் கண் மண் பார்த்தது (கவித கவித) .

திடிரென்று ஒரு கை என் தோளில் விழுந்தது , பார்த்தல் நம் குட் மார்னிங் நண்பர் ,

வாட் ஹேப்பன்ட் டூ யு   ?

நத்திங் ஸார் ?

தென் ஒய் டோன்ட் யு சே குட் மார்னிங்?

ஸாரி ஸார் ஐ டிட்டின்ட் நோட்டிஸ் யு  ...

வாட் ஆர் யு லூகிங் இன் கிரௌண்ட் , ஆர் யு மிஸ்ஸிங் எனிதிங்?

நோ ஸார்.. 

ஓகே தென்  நௌ சே குட் மார்னிங்..

குட் மார்னிங் ஸார்   :-)

அவருடைய ட்ரேட்மர்க் புன்னகையுடன் சென்று விட்டார் ,, அடடா இந்த தடவையும் பெயரை கேக்கலையே   ....

செவ்வாய் கிழமை

இன்று எந்த ப்ளாக்கும் கனவில்  வந்து  கஷ்டப்படுத்தாமலேயே  நாலரை மணிக்கு   முழித்து   (விழித்து மருவி முழித்து ஆகிவிட்டது)   விட்டேன்   நேற்றைய பழக்கமோ ?


சரி என்று இன்றும் கிளம்பி கடற்கரைக்கு சென்றுவிட்டேன் , மீண்டும் அதே அட்சயரேகையும் , தீர்க்கரேகையும் சேருமிடத்தில் சென்று அமர்ந்து இருட்டில் குருட்டு பூனையாய்  மணல் சலித்தேன் ..


எதேட்சையாக திரும்பி பார்த்தால் நம் பெயர் தெரியாத நண்பர் சற்று தூரத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தார் .

நான் மெதுவாக எந்திரித்து சென்று அவர் அருகில் அமர்ந்து குட் மார்னிங் என்று சொன்னேன் , அவர் எந்த பதிலும் சொல்லவில்லை ,,
சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்து குட் மார்னிங் சொல்லிவிட்டு உடனே ஸாரியும் சொன்னார் ..

அவர் மூச்சை அடக்கி வாயில் நுழையாத ஏதோ ஒரு ஆசனத்தின் பெயரை செய்வதாக சொன்னார் . அப்போது பேச கூடாதாம் . அவர் இதை சொல்லி கொண்டிருக்கும் போதும்  என்னையும் அறியாமல் என் கைகள் மண்ணில் எதையோ தேடிக்கொண்டிருந்தது ..

நான் மெதுவாக கேட்டேன்

லெட் மீ நோ யுவர் குட் நேம் ஸார் .

ஒய் டூ  யு வான்ட் டூ நோ மை நேம் ?

என்ன பதில் சொல்வது இதற்க்கு என புரியாமல் சும்மா என கூறினேன் ..

ஓ சும்மாவா ? குட் ஆன்ஸ்வர் .

ஓகே ஜென்டில்மேன் ஐ  அம் கர்னல் ராஜ்  ஐ அம் எ ரிடைர்ட் மிலிட்டரி மேன் ,, ஐ அண்ட் மை ஓயப் ஸ்டே இன் தட் ஹவுஸ் . என சொல்லி கடற்கரையின் ஓரமாய் தூரத்தில் தெரிந்த வீட்டை காண்பித்தார் ,,

அவரின் மகனும் மகளும் அமெரிக்காவில் இருக்கிறார்களாம்
 (துட்டு பார்ட்டி போல , எதுக்கும் கொஞ்சம் காக்கா பிடிச்சு வச்சுக்கணும் 
என மனதில் சாத்தான் வேதம் ஓதியது)  .
பேச்சின்யிடையே  அவர் அப்படியே பக்கத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் குட் மார்னிங் சொல்லிகொண்டே இருந்தார் அப்போதும் என் கைகள் மண்ணில் எதையோ தேடிக்கொண்டிருந்தது...

எங்கள் க்ரூபில் உள்ளவர்கள் வர ஆரம்பித்தார்கள் அதனால் பேச்சு அறுபட்டு வேற பக்கம் சென்றது ...

இப்படியே மேலும் இரண்டு  நாட்கள் நடக்கும்  போது கண்களாலும் , அமரும்போது கைகளாலும் தேடிக்கொண்டே  நகர்ந்தது .. 

வெள்ளிக்கிழமை 

இன்றும் புதிய வழக்கம் போல நாலரை மணிக்கு எந்திரித்து  கிளம்பி சென்றேன் ,,  வழக்கமான அட்சயரேகையும் , தீர்க்கரேகையும் சேருமிடத்தில் ஒருவர் அமர்ந்து நிம்மதியாக காலைக்கடனை செலுத்தி கொண்டிருந்தார் ...........  

தன்னிச்சையாக என் கைகள் என் பாக்கெட்டினுள் சென்றது அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்தேன் , ஏனோ என் கண்களுக்கு அது நாணயமாகவே தெரியவில்லை ,,,

வாயில் திடிரென்று உமிழ்நீர் அதிகமாக சுரக்க கீழே துப்பிவிட்டு அந்த நாணயத்தை தூக்கி கடலில் எறிந்தேன் ,, காரணமில்லாமல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து துப்பிகொண்டே  இருந்தேன் ..

சற்று வேகமாக அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பித்தேன் மனதில் தேவையில்லாத சிந்தனைகள் வந்துகொண்டே இருந்தது

சிறிது நேரத்தில் நண்பர்கள் வர வர என் மனது சற்று மாறியது ,,
அன்று கிளம்பும்போது யோசித்தேன் இன்று என் கண்கள் தேவை இல்லாமல் கீழேயே பார்க்கவில்லை என் கைகள் மணலில் அளையவில்லை..

சனிக்கிழமை

இன்று பழைய வழக்கம் போல ஐந்து மணிக்கு எந்திரித்து ஐந்தரைக்கு சென்றேன் ,, சில நண்பர்கள் முன்னரே வந்து விட்டனர் ..

தூரத்தில் நம் கர்னல் ராஜ் வந்து கொண்டிருந்தார் ..
அவர் ஏன் அங்கு யாருக்கும் குட் மார்னிங் சொல்லாமல் கீழே பார்த்துக்கொண்டே வருகிறார் ?



*********************************************************************************
பின் குறிப்பு :
இது எனது முதல் சிறுகதை , உங்களது மேலான கமெண்ட்களை (comment )    
பதிவு செய்தால் அது என்னை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் .

உங்கள்
G

Friday, 26 August 2011

டூ வீலரும் மவுண்ட் ரோடும் - 1 (அம்மாவும் மகனும்)

இன்று காலையில் புறப்படும்போது மணி 9ஐ நெருங்கி கொண்டு இருந்தது . . .  எங்கள் வீட்டில் இருந்து மெயின் ரோட்டை தொடவே கால்மணி நேரம் ஆகும் . சென்னையில் எல்லா மெயின் ரோடுகளையும் போல இந்த மெயின் ரோடும் பரபரப்பாகவே இருந்தது ...

என் முழு பயணத்தையும் சொல்வதற்கு தனி பிளாக் ஆரம்பிக்க வேண்டும் , ஆனால் இங்கு லேபிள் முன்னரே கொடுத்தது போல ஒரே ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன்,.

மவுண்ட் ரோடு நந்தனம் சிக்னலில் நின்றுகொண்டிருகிறேன் அந்த சிக்கலான ட்ராப்பிக்கிலும் கிடைத்த 
சின்ன சின்ன சந்துகளிலும் புகுந்து  அப்போது என்னை தாண்டி ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு பையன் ஓட்ட  ஒரு பெண்மணி பின்னால்  அமர்ந்திருக்க   கடந்து சென்றனர் எப்படி என்றால் அந்த பையன் காலை இரண்டு புறமும் ஊன்றி ஊன்றி இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி ஊர்ந்து சென்றான் .. பின்னால் இருந்து பைக்கை மட்டும் பார்க்கும் போது பெட்ரோலுக்கு பதிலாக ஆல்ஹஹாலை நிரப்பி ஓட்டுவது போல இருந்தது .

அவர்கள் சென்றபோது அந்த பெண்மணியின் கால்கள் என்னுடைய பைக்கின் பின்புறம் நன்றாகவே மோதியது , கண்டிப்பாக மூன்று நிமிடங்கள் வலிக்கும் ,, (ஜெயமோகனின் யானை டாக்டர் படித்ததில் இருந்து வலியை கவனிக்கவும் கணக்கு போட்டு பார்க்கவும் பழகி உள்ளேன் - கண்டிப்பாக எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று .) அவர்களின் சேலை சக்கரத்திற்கு அருகில் இருப்பதை பார்த்த நான் வேகமாக அருகில் சென்று சொல்ல நினைத்தேன் , ஆனால் அதற்குள் பச்சை விளக்கு எரிய தொடங்கி விட்டது . 
அந்த பையன்  முன்னால்  ரேஸ் சாம்பியன் போல அவ்வளவு வேகமாக சென்றான் .. நானும் ஒருவழியாக வலது பக்கம்  துரத்தி கொண்டு சென்று சொல்லிவிட நினைக்கும் நேரத்தில் இடது பக்கம் இருந்து  இன்னொரு பெண்மணி காரின் கண்ணாடியை இறக்கி அவர்களிடம் சொன்னார்கள் .  அதற்குள் அடுத்த சிக்னல் வந்து விட்டது . அப்போது இரண்டு பேரும் அருகருகில் நின்று கொண்டிருந்தோம் .  

பெண்மணியும் , பையனும் :


ஏன்டா இவ்வளவு வேகமா போய் தொலையற , கொஞ்சம் மெதுவாத்தான் போயேன் ,


அதுக்கு எதுக்கு பைக்கு , நடந்து போக வேண்டியதுதான .. 


கொஞ்சம் இடிக்கமாதான் போ ,, கால் வலிக்குது பாருடா.


என்கூட வந்தா இப்படிதான் அதுக்குத்தான் அப்பவே சொன்னன்ல ..


நான் என்ன டெய்லியுமா சொல்றேன் , என்னைக்காவதுதான . மத்த நாள்ளெல்லாம் பஸ்சுலதான போறேன் .. உன்னைய புள்ளைய பெத்ததுக்கு ....
பேசாம உக்காருமா ,, கோவத்தா கிளப்பாத .. 



அதற்குள் சிக்னல் கிளியராக மறுபடியும் சீறிக்கொண்டு செல்ல ஆரம்பித்தான் ..

நான் என் இடத்திற்கு வரும் வரை இந்த உரையாடலை  யோசித்துகொண்டே  வந்தேன் ..


அவனிடம்  இருப்பது என்ன மாதிரியான அன்பு .. 


அவனை பார்த்தால் எந்த வேலைக்கும் செல்வது போன்ற தோற்றம் இல்லை...


அவனுக்கு இந்த மாதிரியான காஸ்ட்லி பைக் (பல்சர் 200cc )எப்படி கிடைத்தது ..


அம்மாவை கூட்டி போவதற்கு எதற்கு இத்தனை கோவம் ...


எல்லா பிள்ளையை போலவும்தானே இவனும் பிறந்திருப்பான் ...
 

எனக்கு தெரிந்து ஒருவன் கெட்டு போக ஆரம்பிப்பது அவனது ஆறாம் வகுப்பில் ஆரம்பிக்கிறது ..அந்த நேரத்தில் கவனிக்காது சின்ன பிள்ளைதானே என்று விட்டவர்களெல்லாம் பின்னால் இப்படிதான் ..
(நீங்கள் கெட்டு போய் இருந்தால் நன்றாக யோசித்து பாருங்கள் ,, உங்கள் மனதின் முதல் தப்பான (நம் மனதிற்கு தவறு என தெரிந்து செய்வது ) எண்ணம் அந்த பருவத்தில்தான் வந்திருக்க வேண்டும் )
அவன் அவனுடைய அம்மாவை கொண்டு போய் பத்திரமாக சேர்த்து இருப்பானா ?

உங்கள் 
G










Thursday, 25 August 2011

டூ வீலரும் மவுண்ட் ரோடும்

நான் ஒரு மென்பொருள் பொறியாளர் ,,  புரிகிறதா ,  இல்லை என்றால் நாம் அறிந்த தமிழ்  மொழியில் சொல்ல வேண்டுமென்றால் சாப்ட்வேர் ஆளு :-)

நான் தினமும் எனது டூ வீலரில் சுமார் 40  கிலோ மீட்டர் போய் வந்து கொண்டிருக்கிறேன் , முக்கியமாக தினமும் மவுண்ட் ரோட்டில் மூன்றில் முக்கா பங்கு தூரத்தை கடக்க வேண்டும் ,, அநேகமாக எல்லா சிக்னல்களும் எனக்கு சிவப்பு விளக்கை மட்டுமே காண்பிக்கும் :-)

அந்த நேரங்களில் எல்லாம் வைட்டமின் D  சத்து இலவசமாக  உள்ளே ஏறிவிடும் (இப்படித்தான் மனச தேத்திக்கணும்) . ஆனால் ஒவ்வொரு சிக்னலிலும்  என்னை சுற்றி இருப்பவர்களின் பேச்சை கேட்பதும் , செய்யும் கோணங்கிதனங்களும் சுவாரசியமாக இருக்கும் ,,, சில சமயம் சிரிப்பாகவும் சில சமயம் சோகமாகவும் சில சமயம் கேலியாகவும் இருக்கும் .

இன்று காலையில் தோன்றியதுதான் ஏன் இதை  நாம் நம் ப்ளாக்கில் போட (பதிவேற்றம் செய்வது )  கூடாது என்று ?

இதனால் சகலமனவருக்குயெல்லாம்  தெரிவிப்பது என்னவென்றால் உங்கள் நான் இன்று முதல் வேண்டாம் நாளை முதல் தினமும் நான் ரசிக்கும் ஒரு சம்பவத்தை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ள (கொல்ல) போகிறேன் . 

பின் குறிப்பு :
ஒருவேளை நீங்கள் மவுண்ட் ரோடு சிக்னல்களில் பேசியதும் வரலாம் ,
என்னை ஒட்டு கேட்பவன் என்று தப்பாக எண்ணி கேஸ் (Case not Gas ) போட்டு விடாதீர்கள் ,,
என் காதிற்கு எட்டும்படி பேசுவது உங்கள் குற்றம். :-)


அன்புடன்
G





Wednesday, 24 August 2011

கொஞ்சம் காதல் கவிதை எழுதி பார்க்கலாம் என்று இந்த முயற்சி - 2

சத்திய சோதனை
படிக்கும் போது
சத்தியமாய்
உன் நினைவுதான்
காந்தி
கல்லால் அடிக்கிறார்
கனவில் ...........

மறந்து விடத்தான்
நினைக்கிறேன்
ஆனால்
நினைப்பதை
மறக்க முடியவில்லை ......

பார்க்கும்
பெண்களின்
முகங்களிலெல்லாம்
படரும்
உன் முகம்
பார்க்கிறேன் ............

எவளிடமும்
இல்லாதது
அப்படியென்ன
உன்னிடம்
எப்படி இழந்தேன்
என்னை
உன்னிடம் ............

என் மகிழ்ச்சியை
எல்லாம்
மறைத்து கொண்டு
பார்க்கும் போது
மட்டுமே
பரிசளிக்கிறாய் ...........

என் கவிதை பூவிற்கு
விதை நீ
என் கற்பனை மழைக்கு
கருமேகம் நீ
என் மன அலைக்கு
கரை நீ ..........

ஐந்து நிமிட
இடைவெளியில்
ஆறு நிமிடம்
எடுத்து
உன்னை நினைக்கிறேன் .........

என்னை போல
எத்தனையோ பேர்
உன் வாழ்வில்
ஆனால்
உன்னை போல
ஒருத்திதான்
என் வாழ்வில்
இன்றல்ல
என்றும் ..............











கொஞ்சம் கவலை படாதே டைப் கவிதை எழுதி பார்க்கலாம் என்று இந்த முயற்சி - 1

கண் அருகில்
உள்ள
தூசி கூட
அகிலத்தையே  
மறைத்து விடும்
அரையடி
தள்ளி வைத்தால்
அது
காணமல் போய்விடும்
உன்
கவலைகளும் ..........

எல்லா துன்பத்திற்கும்
ஒரு
இன்பமான
முடிவு உண்டு
கண்டிப்பாய்
காலம் மாற்றும்...

மனதில் தோன்றியதை
மூளைக்கு
கொண்டு செல்
மனம்
லேசாகும்
ஆயிரம்
பிரச்சனைகளை
ஐந்து நிமிடத்தில்
தீர்க்க முடியும்
உன்னால் ...........

கவலைகளில்
கலங்காதிரு..
கண்டிப்பாய் மாறிவிடும்
இது
காலத்தின் கட்டளை .....

தினம்
கழட்டி எறியும்
ஆடைகளோடு
உன்
கவலைகளையும்
எறிந்து விடு ......

அன்புடன்
G





Tuesday, 23 August 2011

கொஞ்சம் காதல் கவிதை எழுதி பார்க்கலாம் என்று இந்த முயற்சி - 1


அவநம்பிக்கை
அதிகம்
அடுத்த ஜென்மம்
என்பதில் - ஆனாலும்
வேண்டுகிறேன்
அவளோடு
அமைய வேண்டுமென .........

*****************************

உன் மீது
உள்ள காதல்
உலகளவும் இல்லை
கடலளவும் இல்லை
மலையளவும் இல்லை 
என் சிறு
இதயத்தின் அளவுதான் .....

முன்பு உனக்கென்று
ஒரு இடம்
என் இதயத்தில்
இப்போது
இதயமே
உன்னிடத்தில்.....

இது
இனக்கவர்ச்சியல்ல
இதயகவர்ச்சி...........

******************************

எப்படி ?????????????
--------------------------

என்னையே எனக்கு
பிடிக்காத போது
உன்னை மட்டும்
பிடிக்க வைத்தது
எப்படி ?

யாரை பற்றியும்
எண்ணாத
என் மனதில்
உன்னை மட்டும்
எண்ண வைத்தது
எப்படி ?

இத்தனை காலமும்
நான்
மதிக்காத பூவை
இன்று மட்டும்
நின்று நிதானித்து
பார்க்க வைத்தது
எப்படி ?

காதடைக்கும் சப்தத்தில்
மட்டும்   
திருப்தியான நான்
இன்று
மெல்லிசையில்
திருப்தியாகிறேன்
எப்படி ?

தொலைபேசி
அழைக்கும் போதெல்லாம்
தொலைவில் இருந்தாலும்
ஓடிவரவைத்தது
எப்படி ?

நுனிபுல் மேய்வது
போல
கவிதைகளை பார்த்த
என்னை
ஆயிரம் அர்த்தம்
தேட வைத்தது
எப்படி ?

என் பிரார்த்தனையில்
எனக்கு
தெரியாமல்
உன் பெயர்
உள்ளே வந்தது
எப்படி ?

எந்நேரமும் இறப்பதற்கு
தயாராக
இருந்த நான்
இன்று
நூறு ஆண்டுகள்
வாழ விரும்புகிறேன்
எப்படி ?




அன்புடன்
G